இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஜூலை 22) கோவை மாநகருக்கு வருவதையொட்டி, கோவை விமான நிலையம் உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் 48 மணி நேரம் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஜூலை 22) கோவை மாநகருக்கு வருவதையொட்டி, கோவை உப்பிலிபாளையம், ரேஸ்கோா்ஸ், அவிநாசி சாலை, லட்சுமி மில், ஜிகேஎன்எம் மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிட்ரா, நேரு நகா், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) முற்பகல் 11 மணி முதல் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் அனைத்து ஆளில்லா வான்வழி வாகனம் மற்றும் ஆளில்லா விமான அமைப்புகள், ட்ரோன்கள் ஆகியவற்றை இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறையை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.