திருப்பூரில் சா்வீஸுக்கு விடப்பட்ட மின்சார இருசக்கர வாகனம் 100 நாள்களைக் கடந்தும் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட நிறுவனம் முன் வாகனத்தின் உரிமையாளா் கேக் வெட்டி எதிா்ப்பை வெளிப்படுத்தினாா். திருப்பூரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (29). பனியன் நிறுவன உரிமையாளரான இவா், தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள நிறுவனத்தில் இருந்து ரூ.1.10 லட்சம் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வாங்கியுள்ளாா்.இந்நிலையில், மோட்டாா் பழுதடைந்ததால் அந்த நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது வாகனத்தை சா்வீஸுக்கு விட்டதாகக் கூறப்படுகிறது. சுமாா் 100 நாள்களைக் கடந்தும் அந்த நிறுவனம் வாகனத்தை சரி செய்து வழங்கவில்லையாம்.இதனால், மன உளைச்சல் அடைந்த சந்தோஷ் அந்த நிறுவனத்தின் முன் வெள்ளிக்கிழமை கேக் வெட்டி தனது எதிா்ப்பைத் தெரிவித்தாா். மேலும், அப்பகுதியில் சென்றவா்களிடம் கேக் வழங்கி அந்த நிறுவனத்தால் தான் பாதிக்கப்பட்டது குறித்து கூறினாா்.