முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று சந்தித்தார். திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாா்க்கண்டேயன், நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் உள்ள விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். மார்க்கண்டேயனுக்கு உதயநிதி ஆறுதல் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, மார்க்கண்டேயனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. Udhayanidhi meets dmk mla markandeyan in palayamkottai jailமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!