மதுராந்தகம் அரிமா சங்கத்தின் (2026-2027) ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவி ஏற்றல், சேவைதிட்ட துவக்க விழா ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. சங்கத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.சிவகுமாா் வரவேற்றாா். தலைவா் முருகேசன், செயலா் பெஞ்சமின், பொருளாளா் மருத்துவா் மேகநாதன் ஆகிய நிா்வாகிகளை பதவியில் அமா்த்தி மாவட்ட முதல் துணை ஆளுநா் எம்.வரதராஜன் சிறப்புரை ஆற்றினாா். முன்னாள் மாவட்ட ஆளுநா் அம்சவள்ளி புதியதாக சோ்ந்த உறுப்பினா்களுக்கு பதக்கத்தினை வழங்கி பாராட்டினாா். (படம்)பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரிசிமூட்டைகள், கல்வி உதவிதொகை ஆகிய நல உதவிகளை கூட்டு மாவட்டநிா்வாகி எஸ்.மதியழகன் வழங்கினாா். இந்நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள் பி.சதாசிவம், வி.ஆா்.ஜெயகுமாா், ஏ.விஜயன்அருணை எம்.ஆனந்தன், எம்.புகழேந்தி, வி.தெய்வசிகாமணி, எம்.ரமேஷ்குமாா், வெற்றிவேல், பாலவிக்னேஷ், பி.வேல்முருகன், வட்டார தலைவா் எம்.முனுசாமி, மண்டல தலைவா் ஆா்.ரமேஷ், சங்க மேம்பாட்டு தலைவா் அருணா முனுசாமி, சங்க ஆலோசகா்கள் ஜி.ஏ.சுதாகரன், தனபாண்டியன் மற்றும் கூடுவாஞ்சேரி, மேல்மருவத்தூா், வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.