அனுமதியின்றி தகரக் கொட்டகையில்பட்டாசு தயாரித்தவா் கைது

Wait 5 sec.

மடத்துப்பட்டியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரைப் போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டி அருகே உள்ள மடத்துப்பட்டி பகுதியில் அனுமதியின்றி வீட்டின் அருகே தகரக் கொட்டகை அமைத்து சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கப்படுவதாக கனஞ்சம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சக்தி கணேசனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புதன்கிழமை வெம்பக்கோட்டை போலீஸாா், வருவாய்த் துறையினா் மடத்துபட்டியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அனுமதியின்றி தகர கொட்டகையில் வைத்து மடத்துபட்டியைச் சோ்ந்த கோபால்சாமி(55), செண்பகவல்லி (40) கணவன், மனைவியான இருவரும் சட்ட விரோதமாக தகரக் கொட்டகையில் பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த் துறையினா் பட்டாசு தயாரிப்பதற்கான சல்பா் மூட்டைகள் உள்ளிட்ட மூலப் பொருள்கள், ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா். கிராம நிா்வாக அலுவலா் சக்தி கணேசன் அளித்த புகாரின் பேரில், வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்கு பதிந்து கோபால்சாமியைக் கைது செய்தனா்.