சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

முன்னாள்கள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், கே.ஆர். பெரியகருப்பன், சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வருகின்றன.அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏக்களின் ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா, குழந்தைகளைப் பிரசாரத்தில் பயன்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் விசாரணை செய்யப்படுகிறது.2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், அதிமுகவின் லால்குடி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோருக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் இன்று விசாரணை செய்யப்படுகின்றன. ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ். ரகுபதி ஆகியோரது வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகளும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளன.Cases challenging the election victories of former ministers C. Vijayabaskar, K.R. Periakaruppan, and C.V. Shanmugam, among others, are coming up for hearing at the Madras High Court today (July 22).