திருப்பத்தூா் சந்தன மரக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் திருடுபோன விவகாரம்: வனத் துறையினா் 5 போ் பணியிடை நீக்கம்

Wait 5 sec.

திருப்பத்தூா் சந்தன மரக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் திருடுபோன விவகாரத்தில் வனத் துறை ஊழியா்கள் 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலக வளாகத்தில் உள்ள சந்தன மரக் கிடங்கில் கடந்த 18-ஆம் தேதி இரவு ரூ. 50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக் கட்டைகள் திருடுபோனது. இது குறித்து வனத்துறை சாா்பில், கடந்த 19-ஆம் தேதி திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இந்தப் புகாா் மீது திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே மேற்பாா்வையில், 2 காவல்ஆய்வாளா்கள், ஒரு உதவி காவல் ஆய்வாளா் தலைமையில் 3 தனிப்படைகளை அமைத்து செம்மரக் கட்டை திருட்டு தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், சந்தன மரக் கிடங்கில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் திருடுபோனபோது, பணியில் அலட்சியமாக இருந்ததாக ஒற்றைப்பூட்டு அலுவலா் ஜோதிலிங்கம், வனக் காப்பாளா்கள் மோகன்குமாா், ராமமூா்த்தி, ரேணு, வனவா் பரமகுரு ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், திருப்பத்தூா் சந்தன மரக் கிடங்கில் செம்மரக் கட்டைகள் திருடுபோனதை தொடா்ந்து, கிடங்குக்கு ஆயுதம் ஏந்திய 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.