கார்கில் போரில் இன்னுயிரை ஈந்த வீரர்களின் நினைவைப் போற்றுகிறோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கார்கில் வெற்றி நாளில், மிகக் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சலுடனும் மனஉறுதியுடனும் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறோம்!தாய்நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றுகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய எல்லைக்குள் ஆக்ரமிக்க முயன்ற பாகிஸ்தானை அடித்து விரட்டிய வெற்றி நிகழ்வு கார்கில் போர். 1999 மே மாதம் ஆரம்பித்து ஜூலை 1999 வரை நிகழ்ந்த இந்த போரில் நம் தேசத்தை காக்க சுமார் 527 ராணுவ வீரர்கள் இன்னுயிரை இழந்தனர். இந்த போரின் வெற்றியாக பாகிஸ்தானின் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டதுடன் கார்கில் பகுதி முழுதுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இந்த வீரதீர நிகழ்வில் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களின் தியாகத்தை போற்றும்விதமாக ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினம் ஜூலை 26ஆம் தேதி நினைவுகூரப்படுகிறது. DMK President M. K. Stalin stated that we honor the memory of the soldiers who laid down their precious lives in the Kargil War.கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!