முத்தரப்பு டி20 தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

Wait 5 sec.

முத்தரப்பு டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.நமீபியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.தென்னாப்பிரிக்காவுக்கு 145 ரன்கள் இலக்கு!டாஸ் வென்று முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் 35 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மருமானி 13 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். பென் கரண் 24 ரன்கள், டியான் மையர்ஸ் 17 ரன்கள் மற்றும் வெஸ்லி மத்வீர் 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.தென்னாப்பிரிக்கா தரப்பில் டுயன் ஜேன்சன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரேநேலன் சுப்ராயன் இரண்டு விக்கெட்டுகளையும், ஈதன் போஷ், குவெனா மாபாகா மற்றும் ஜோர்ன் ஃபோர்ட்டூயின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.Batting first in the match against South Africa in the tri-nation T20 series, Zimbabwe scored 144 runs for the loss of 8 wickets.நான் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர் என்பது இஷான் கிஷனுக்குத் தெரியாது: சூர்யவன்ஷி