கண்ணியத்துடன் பேசுங்கள்: சட்டப்பேரவையில் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தல்

Wait 5 sec.

சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படாத அளவுக்கு இருக்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் பேசியதாவது, "சட்டப்பேரவையின் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட கருத்துகளெல்லாம் சமூக ஊடகங்களில் பரவுவதாக கடந்த வாரம் சட்டப்பேரவையில் கூறினர். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.இந்த நிலையில், திண்டுக்கல்லில் தனியார் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நேரத்தில், எந்தவொரு அரசியல் கட்சிகளைச் சாராத இளைஞர்கள் குழு என்னைச் சந்தித்தனர்.அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும், அரசியல் என்றால் என்ன என்பவற்றைப் படிப்படியாகத் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்திருப்பதாகக் கூறினர்.அவர்களின் குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை, அவர்கள் குடும்பத்தில் யாரும் அமைச்சராகவோ எம்எல்ஏ-வாகவோ இல்லை. இருப்பினும், அவர்கள் அரசியலில் ஈடுபடும் எண்ணம் வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.அதேசமயம், அவைக் குறிப்பில் இருந்து நீக்கும் அளவுக்கு ஏன் பேச வேண்டும் என எம்எல்ஏ-க்கள் யோசிக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்பினர். பேசுகிறபோதே அவைக் குறிப்பில் இருந்து நீக்காத அளவுக்கு பேச வேண்டும் என்று எம்எல்ஏ-க்களுக்கு அறிவுறுத்தக் கூடாதா என்றும் கேட்டனர்.ஆகையால், சட்டப்பேரவையில் பேசுகிற உறுப்பினர்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, முறைப்படுத்திக் கொண்டு, நெறிப்படுத்திக் கொண்டு, அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் விஷயங்களை ஏன் பேச வேண்டும் என சொல்லித் தரக் கூடாதா என்றும் கேட்கின்றனர். இதனை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.சட்டப்பேரவையில் பேசுகிற உறுப்பினர்கள், அவையின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் உங்களின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் வாக்காளர்களின் கண்ணியத்தையும் காப்பாற்றுகிற விதத்தில் பேசினால், இவ்வாறான பிரச்னை வராது.அதையும் மீறி, அவையின் மாண்பைக் குறைக்கிற வகையில் பணிகள் நடைபெறும்போது, அவ்வாறு செய்கிறவர்களை வெளிக்கொணர்வதில் என்ன தவறு என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.ஆகையால், இந்தப் பிரச்னை குறித்து உங்கள் அனைவரிடமும் கலந்தாலோசித்து விரிவான முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.தவெக அரசுடன் சேர்ந்து செயல்படாத மேயர் பிரியா!Assembly Speaker JCD Prabhakar issues instructions to Members of the TN Legislative Assembly