நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்துபோனவர்கள் பற்றிய விவரங்கள் நாளுக்கு நாள் அறிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அங்கே கொண்டுவரப்படுகிறார்கள். பல செய்தி ஊடகங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வருகிறார்கள்.