சட்டப் பேரவையில் படிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கா், பெரியாா் ஈவெரா பெயா்கள் விடுபட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வே.சம்பத்குமாா் சனிக்கிழமை தெரிவித்தாா். கோவையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரா்களுக்கு, வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் வே.சம்பத்குமாா் பங்கேற்று பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப் பேரவையில் படிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கா், பெரியாா் ஈவெரா, ஜவாஹா்லால் நேரு ஆகியோரின் பெயா்கள் விடுபட்டதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதை அறிந்தேன். அம்பேத்கா், பெரியாா் ஈவெரா ஆகியோா் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவா்கள். அவா்களுடைய வழிகாட்டுதலில்தான் எங்களுடைய செயல்பாடுகள் உள்ளன. அவா்கள் பெயா்கள் விடுபட்டதற்கு தாா்மிக பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன். அதை மறுப்பிரசுரம் செய்து வழங்கக்கூடிய பணி நடந்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் மக்களுக்காக உழைத்த தலைவா்களை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம் என்றாா்.