காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவன் பலி!

Wait 5 sec.

காஞ்சிபுரத்தில் கிரிக்கெட் விளையாடியபோது பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே என்ஜிஓ நகர் பகுதியைச் சேர்ந்த சுகிர்தா லட்சுமியின் 11 வயது மகன் சாய் மோதிஷ். இச்சிறுவன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தான்.கடந்த 26ஆம் தேதி அரசு விடுமுறையையொட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டுத் திடலில் சாய் மோதிஷ் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான்.அப்போது, திடலில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், எங்கிருந்தோ வேகமாக வந்த கிரிக்கெட் பந்து எதிர்பாராதவிதமாக சிறுவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான்.உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான்.இந்த நிலையில், இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பலியானான். சிறுவனின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், காஞ்சி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 11-year-old boy dies after being hit on the head by a ball while playing cricket in Kanchipuram; incident causes deep sorrow.தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!