காத்மாண்டு: மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 768-ஆக உயர்ந்துள்ளது; மேலும் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பேரிடர் நிகழ்ந்து ஐந்து நாட்களாகியும் காணாமல் போன மற்றும் சிக்கித் தவிக்கும் 2,500-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்; பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களிலிருந்தும் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலிருந்து இதுவரை 227 வெளிநாட்டினர் உள்பட 8,186 பேரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக நேபாள தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.மீட்புப் பணிகள் சவாலாக உள்ளதுதிடீர் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் சேறும் சகதியும், குப்பை மேடுகளாக மாறியிருப்பதால் மீட்புப் பணிகள் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனால் மீட்பு மற்றும் நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கைபோடே கோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் நேபாள அரசு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. ஆற்றில் வெள்ள ஓட்டம் அதிகரித்துள்ளதாக நேபாள தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங், சித்வான் ஆகிய மாவட்டங்களில் உள்ள போட்டே கோஷி ஆற்றின் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு ரசுவா மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.திடீர் வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து நேபாளத்தில் இதுவரை 108 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். முன்னதாகத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்த சுமார் 50 இந்தியர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.275 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளிடினர் 128 பேரும் காணாமல் போயுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாள்களில் சீனாவின் திபெத் பகுதியில் சிக்கித் தவித்த 598 இந்தியர்கள் பத்திரமாக நேபாள பகுதிற்குள் நுழைந்துள்ளனர். இதற்கிடையில், சீனாவிலிருந்து இன்னும் புறப்படாத 900 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்; பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் அவர்களுடன் நேரடியாகவோ அல்லது உள்ளூர் அரசு மூலமாகவோ தொடர்பில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மீட்பது மற்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக இந்திய அரசு, நேபாள மற்றும் சீன அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. 11 டன் நிவாரணப் பொருள்களுடன் நான்காவது விமானம் காத்மாண்டுவை சென்றடைந்துள்ளது; நிவாரணப் பொருள்கள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில், நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அந்த விமானம் அத்தியாவசியப் பொருள்களையும் தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சுரங்க மீட்புப் பணிகளுக்கான தொழில்நுட்பக் குழுவையும் இந்தியா அனுப்பிவைத்துள்ளது. முன்னதாக, இந்தியா மூன்று விமானங்கள் மூலம் 57 டன்களுக்கும் அதிகமான அவசரகால நிவாரணப் பொருள்களை அனுப்பியிருந்தது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு, வெள்ளம், மண் மற்றும் குப்பைகளை ஆற்று நீரில் அடித்துச் சென்றது. கடந்த புதன்கிழமை(ஆக 26) மத்திய நேபாளம் முழுவதும் ஏற்பட்ட இந்தச் சரிவு, நகரங்களையும் கிராமங்களையும் அழித்ததுடன், முக்கிய உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தி, நீர்மின் நிலையங்களையும் அடித்துச் சென்றது.The death toll from flash floods in central Nepal has risen to 768 today, with more bodies being recovered. More than 2,500 people are still missing following the disaster.தமிழக அரசு அலட்சியமாக இருந்து காவிரி உரிமையை இழக்கக் கூடாது! - அன்புமணி வலியுறுத்தல்