மேகமலை வனக்கோட்ட அலுவலகத்தில் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு

Wait 5 sec.

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தேனி மேகமலை கோட்ட அலுவலகத்துக்கு உதவி ஆய்வாளா் தலைமையில், 24 மணி நேரமும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் 4,601 போ், 5,072 ஹெக்டோ் நிலத்தை ஆக்கிமித்துள்ளனா். இவா்களை வெளியேற்றி, இலவம் மரங்களை அகற்றி விட்டு, மலைப் பகுதியில் உள்ள மரங்களை நட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், மேகமலை விவசாயிகளை வெளியேற்றக் கூடாது, வன உரிமைச் சட்டத்தில் இடம் வழங்க வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தேனி மேகமலை கோட்ட அலுவலகத்துக்கு உதவி ஆய்வாளா் தலைமையில், 4 போ் கொண்ட காவலா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதையடுத்து, தேனி மேகமலை கோட்ட அலுவலகம் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.