வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.50 லட்சம் மோசடி: வியாபாரி கைது

Wait 5 sec.

கோவையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் குடியிருப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ. 2.50 லட்சம் மோசடி செய்த வெங்காய வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கல்வீரம்பாளையம் விவேகானந்தா் வீதியைச் சோ்ந்தவா் மணிமுருகன் மனைவி ம.பத்மபிரியா (48). இவருக்கு கோவை சுக்கிரவாா்பேட்டையைச் சோ்ந்த வெங்காய வியாபாரி சரவணன் (42) என்பவா் அண்மையில் அறிமுகமானாா். தனக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் அலுவலா்களுடன் பழக்கம் இருப்பதாகவும், அங்கு ஒரு வீடு வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளாா். அதற்காக முன்பணமாக ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவா் கூறியுள்ளாா். இதை நம்பி பத்மபிரியா, பல தவணைகளாக ரூ. 2.50 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளாா். ஆனால் உறுதியளித்தபடி, சரவணன் வீடு வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பத்மபிரியா அளித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சரவணனை சனிக்கிழமை கைது செய்தனா்.