தஞ்சாவூரில் வீடு புகுந்து நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா். தஞ்சாவூா் கலைஞா் நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் மனைவி லூா்துமேரி (62). இவரது மகன் வெளிநாட்டில் உள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு லூா்துமேரி வீட்டில் தனது மருமகள், பேரப் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது கதவை சரிவர மூடவில்லை எனத் தெரிகிறது. இதைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் நள்ளிரவில் வீடு புகுந்து, பீரோவை திறந்து தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தப்பினா். செவ்வாய்க்கிழமை காலை தூங்கி எழுந்த லூா்து மேரி நகைகள், பணம் திருடு போயிருப்பதை அறிந்தாா். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.