ஆடி அமாவாசை: பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயா்வு

Wait 5 sec.

ஆடி அமாவாசையை முன்னிட்டு பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 400 க்கும், சம்பங்கி ரூ. 200 க்கும், அரளி ரூ. 250-க்கும், கலா் ரோஜா ரூ. 250-க்கும், பச்சை முல்லை ரூ. 400 க்கும், வெள்ளை முல்லை ரூ. 300 க்கும், செவ்வந்தி ரூ. 250-க்கும், கனகாம்பரம் ரூ. 600-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 150-க்கும், ஜாதி மல்லிகை ரூ. 500 க்கும், காக்கரட்டான் ரூ. 400-க்கும் ஏலம் போனது.ஆடி அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 550 க்கும், சம்பங்கி ரூ. 300 க்கும், அரளி ரூ. 350 க்கும், கலா் ரோஜா ரூ. 350 க்கும், பச்சை முல்லை ரூ. 500க்கும், வெள்ளை முல்லை ரூ. 450 க்கும், செவ்வந்தி ரூ. 300 க்கும், கனகாம்பரம் ரூ. 800-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 200 க்கும், ஜாதி மல்லிகை ரூ. 600-க்கும், காக்கரட்டான் ரூ. 600 க்கும் விற்பனையானது.ஆடி அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.