மத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள தொகரப்பள்ளியை அடுத்த கரடிகொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (46). வேலூரில் இனிப்பகம் நடத்திவருகிறாா். இவா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வேலூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா். புதன்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், வீட்டிற்குள் சென்று பாா்த்த போது, பீரோவில் இருந்த ஏழரை பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 1 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.