இலங்கையில் காவல்துறை தலைவா் குறித்து அவதூறு: முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் கைது

Wait 5 sec.

இலங்கை காவல் துறை தலைவா் பிரியந்த வீரசூரிய குறித்து அவதூறாக பேசியதாக, முக்கிய எதிா்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி) கட்சியின் பொதுச் செயலா் சாகர காரியவசம் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். கட்சித் தலைமையகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய சாகர காரியவசம், ‘காவல் துறை தலைவா் ஆளுங்கட்சியின் பணியாளா் போல செயல்படுகிறாா். ஆனால், அவா் பொதுமக்களுக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று விமா்சித்தாா். காவல் துறை தலைவரை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த சா்ச்சை பேச்சு தொடா்பாக, வாக்குமூலம் அளிக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாகர காரியவசம் ஆஜரானபோது இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ராஜபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள எஸ்எல்பிபி கட்சி, இக்கைது நடவடிக்கையை ஆளும் அரசின் ‘அரசியல் பழிவாங்கல்’ எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.