உ.பி.: தன்னைப் பார்த்துக் குரைத்த நாயை சுட்டுக்கொன்ற நபர்!

Wait 5 sec.

உத்தர பிரதேசத்தில் நாய் குரைத்ததால் ஆத்திரமைடைந்த நபர் அதனைச் சுட்டுக்கொன்றார்.உத்தர பிரதேச மாநிலம், அலிகரில் உள்ள போஜ்பூர் கிராமத்தில் விஸ்வஜித் (45) தனது இருசக்கர வாகனத்தில் பண்ணை வீட்டை நோக்கிச் சென்றிருக்கிறார். அப்போது, ஹரிஓம் சர்மா என்பவரது வீட்டைக் கடந்து அவர் சென்றுள்ளார். இந்த நிலையில் அந்த வீட்டின் செல்லப்பிராணி நாய் அவரைப் பார்த்துக் குரைத்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த விஸ்வஜித் கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு மிகவும் ஆத்திமடைந்தார். பிறகு தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து நாயை நோக்கிச் சுட்டுள்ளார். இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே பலியானது. துப்பாக்கிச் சூடு சப்தத்தைக் கேட்டு வெளியே வந்த ஹரிஓமின் 23 வயது மகன் விகாஸ், நாய் கொல்லப்பட்டது குறித்து விஸ்வஜித்திடம் கேட்டுள்ளார். உடனே விகாஸையும் விஸ்வஜித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஸ்வஜித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த விகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூடு குறித்துத் தகவல் அறிந்த ஹர்துவாகஞ்ச் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதோடு தப்பியோடி குற்றவாளியையும் அவர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல் ஆய்வாளர் யோகேந்திர சிங் தெரிவித்துள்ளார்.Aligarh: Upset with constant barking, a man shot dead a dog in an Aligarh village.மலைக் கிராமங்களை விட்டு மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டும்: சீமான்