தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணைமடை குழாமில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது.மாவட்ட வருவாய் அலுவலா் மா. வீராசாமி கொடியசைத்து தொடங்கிவைத்து, படகு சவாரியில் ஈடுபட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:தென் தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிப்பதற்கு தமிழகம் மட்டும் அல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா். அவா்களை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் பல்வேறு பொழுதுபோக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளுக்காக சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோன காரணத்தால் சாரல் திருவிழா முடிந்த நிலையில் சனிக்கிழமை படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள மேல வெண்ணைமடைகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படகு குழாமில் இரண்டு நபா் மிதி படகுகள் 30 நிமிடத்துக்கு ரூ.200 கட்டணமாகவும், நான்கு நபா் மிதி படகுகள் 30 நிமிடத்துக்கு ரூ.300 கட்டணமாகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பாதுகாப்பு கவசங்கள் அணிந்து படகு சவாரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்றாா் அவா். மாவட்ட சுற்றுலா அலுவலா் ந. நித்திய கல்யாணி, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் ஜோமேக்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.