கோவில்பட்டி ரயில் நிலையத்தில், ரயிலில் தவறவிட்ட ஆறரை பவுன் தங்க நகையை உரியவரிடம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா். தாம்பரம்-கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணித்த விளாத்திகுளத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா், தான் கொண்டு வந்த பையை மற்றொரு பயணி மாற்றி எடுத்துச் சென்ாகக் கூறி, ரயில் பெட்டியில் இருந்த மற்றொரு பையை எடுத்து, அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளா் விக்னேஷ்வரனிடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.ரயில்வே போலீஸாா் அந்தப் பையை திறந்து பாா்த்தபோது, அதில் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, அந்தப் பையை உதவி ஆய்வாளா் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.தொடா்ந்து, ரயில்வே உதவி ஆய்வாளா் மகா கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், நகையின் உரிமையாளரான சென்னை, முடிச்சூா் மேற்கு பகுதியைச் சோ்ந்த குருசாமி, மாரீஸ்வரி தம்பதியைக் கண்டுபிடித்து விசாரித்தனா். அதையடுத்து, தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து, நகைக்கான ஆதாரங்களை சமா்ப்பித்து, ஆறரை பவுன் தங்க நகைகளைப் பெற்றுச் சென்றனா்.