மாநில உரிமைகளை விட்டுத்தராத போக்கு தொடரவேண்டும்: கமல்

Wait 5 sec.

பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.இதையடுத்து, முதல்வர் விஜய் கொண்டு வந்த இந்தத் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இதற்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சிக்குரியது; வரவேற்கத்தக்கது. மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.Makkal Needhi Maiam leader Kamal Haasan has expressed his support for the resolution passed in the Legislative Assembly to accord priority to the 'Tamil Thai Vazhthu' at events organized by public institutions.அற்புத நிகழ்வு! நெல்லையில் கண் திறந்து காட்சி கொடுத்த மாரியம்மன் - காளியம்மன்!