அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.கோவை அருகே கைப்பேசியை பறித்துச் சென்றது தொடர்பான மோதலில் பொறியியல் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:கோவையில் தனியார் கல்லூரியில் படித்துவந்த முதலாம் ஆண்டு மாணவர், போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததற்காகப் போதை பழக்கத்தில் ஈடுபட்ட மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், அதை மாணவர்கள் இடையேயான கோஷ்டி மோதல் என்று திசைதிருப்பும் வகையில் வழக்கை முடித்து வைக்கப்பார்க்கிறது தவெக அரசு.கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் அளித்த பின் பாதுகாக்கத் தவறியதால்தான், அம்மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் கூறும் நிலையில், பலியான அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு?இந்தக் கொலையைச் செய்தவர்கள் மட்டுமின்றி, பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.DMK MP Kanimozhi has questioned whether the TVK government is attempting to cover up the truth by framing an innocent student as the culprit.பொறியியல் கல்லூரி மாணவா் அடித்துக் கொலை: 5 பேரை கைது செய்து போலீஸாா் விசாரணை