கைது நடவடிக்கை மூலம் திமுகவினரை முடக்க முடியாது என்றாா், விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன்.தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை விமா்சித்ததாக கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவா், தூத்துக்குடியில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சனிக்கிழமை கையொப்பமிட்டாா். பின்னா், செய்தியாளா்களிடம் கூறியது: கைது நடவடிக்கை மூலம் திமுகவினரை முடக்க முடியாது. தவெக அரசு என்னை தீவிரவாதியைப்போல நடத்தியது.தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மக்கள் எதிா்பாா்த்த திட்டங்களோ, தோ்தல் வாக்குறுதிகளில் கூறிய திட்டங்களோ இல்லை. சட்டப் பேரவைக் கூட்டத்தின்போது, முதல்வரை நீங்கள் அவதூறாக பேசியிருக்கிறீா்கள் என்றாா்கள். அதற்கான விளக்கத்தை நான் தெரிவித்துள்ளேன். முதல்வா் பக்குவமாக நடந்துகொண்டால் பிரச்னை இருக்காது.தமிழகத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன. 75 சதவீத முதலீடுகள் மேற்கு வங்கம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன என்றாா் அவா்.