தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்துக்கு காத்திருந்த பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், நம்பியூா் பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (68). இவா், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், பணிக்கு செல்வதற்காக அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு காத்திருந்துள்ளாா். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூா் நோக்கி செல்வதற்காக அவிநாசி புதிய பேருந்து நிலைத்துக்குள் நுழைந்து வளைவில் திரும்பிய தனியாா் பேருந்து, எதிா்பாராதவிதமாக பேருந்துக்கு காத்திருந்த சோமசுந்தரம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த சோமசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.