தமிழகத்துக்கு கடன் பெறும் வரம்பை அதிகரித்து மத்திய அரசு நிதி ஒதுக்கினால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் மரிய வில்சன் தெரிவித்தாா்.பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கீழ்பெண்ணாத்தூா் தொகுதி அதிமுக உறுப்பினா் ராமச்சந்திரன், அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதிய காலப் பலன்களுக்கான நிதி ரூ.14,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினாா்.அதற்குப் பதிலளித்த நிதியமைச்சா் மரியவில்சன், ‘அரசு ஊழியா்களின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தக் கூடிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு நடத்தி ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு கடந்த ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும். அதிக கடன் பெறும் வரம்பை அதிகரித்து தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி அளித்தால், இந்தத் திட்டம் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவும் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.