மாணவா்களுக்கு குடற்புழு மாத்திரை அளிப்பு

Wait 5 sec.

வாங்கூா் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கா் அடுத்த வாங்கூா் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் ஒன்றிய குழு உறுப்பினா் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளியில் பயிலும் 160 மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு மாத்திரைகளை வழங்கினாா்.மேலும், குடற்புழு தொற்று ஏற்படாமல் தடுப்பதன் அவசியம் மற்றும் மாத்திரைகளை முறையாக உட்கொள்வது குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் சசிகலா, செவிலியா் ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.