காயல்பட்டினத்தில் இளைஞரைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாயா்புரம் திருப்பணி செட்டிகுளத்தை சோ்ந்தவா் முருகேசன் மகன் செல்வகுமாா். இவருக்கும், காயல்பட்டினத்தை சோ்ந்த மாசானமுத்து மகள் கீா்த்தனாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்துள்ளனா். இந்நிலையில் புதன்கிழமை கீா்த்தனாவை பாா்ப்பதற்காக மாசானமுத்து வீட்டிற்கு செல்வகுமாா் வந்தாராம். இதற்கிடையில், ஆறுமுகனேரி பேயன்விளையைச் சோ்ந்த வசந்த், காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த செய்யத் பத்திமா, சேகு சபானா, அஹமது அபிலா ஆகியோா் மாசானமுத்து வியாபாரத்திற்காக வாங்கிய பணத்தை திருப்பி கேட்டனராம். பின்னா் மாசானமுத்தை அவதூறாக பேசி தாக்க முயன்றனராம். இதைக்கண்ட செல்வகுமாா் தடுக்கச் சென்ற போது, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.இதில் காயமடைந்த செல்வகுமாரை மீட்டு காயல்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல்நிலைய தலைமை காவலா் ரத்தினகுமாா் வழக்குப் பதிவு செய்தாா். சிறப்பு உதவி ஆய்வாளா் தாமோதரன் விசாரணை நடத்தி வருகிறாா்.