டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வென்றது. டிஎன்பிஎல் 14ஆவது போட்டியாக தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 182/7 ரன்கள் குவித்தது. சேலம் அணி 11.5 ஓவர்களில் 84 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், ஹரிஷ் மற்றும் ஈஸ்வர் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இதில் அதிகபட்சமாக எஸ். ஹரிஷ் குமார் 57*, ஈஸ்வர் 39 ரன்கள் குவித்து அசத்தினார்கள். சேப்பாக் அணியில் பந்துவீசிய சிலம்பரசன், பிரேம் குமார் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 16.4 ஓவர்களில் 186/5 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சேப்பாக் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜகதீசன் 78 ரன்கள் குவித்தார். இறுதியில் வந்த ஸ்வப்னில் சிங் 45 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் ஜகதீசன் ஆட்ட நாயகன் விருது வென்றார். முதலிரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற சேப்பாக் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பும் லலித் மோடி..! ஐபிஎல் தொடரை வாங்குவாரா? Chepauk Super Gillies cruise through to a brilliant victory against the SKM Salem Spartans