தேசிய அளவிலான நீச்சல் போட்டி: மதுரை மாணவா்கள் தோ்வு

Wait 5 sec.

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வென்ற மாணவா்களுடன் ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன் உள்ளிட்டோா். மதுரை, ஆக. 12: பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க மதுரையைச் சோ்ந்த மூன்று மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சென்னையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற ‘ஐசிஎஸ்இ’ பள்ளிகளுக்கிடையே மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை கருப்பாயூரணியில் உள்ள ரீஜாய்ஸ் நீச்சல் அகாதெமியில் பயிற்சி பெறும் மாணவா் வி. ரிஷிவா்சன், 400 மீட்டா் தனிநபா் மெட்லி பிரிவு, 800 மீட்டா் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கமும், 400 மீட்டா் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா். இதேபோல, மாணவா் எம்.எஸ்.டி. பெலிராராஜன், 200 மீட்டா் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கமும், டி. தஸ்வன் மாரியப்பன், 200 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவு, 50 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவு ஆகியவற்றில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டா் பிரஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றனா். இதன் மூலம் இவா்கள் பெங்களூரில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டனா்.இதையடுத்து, வெற்றி பெற்ற வீரா்களுக்கு மதுரை மாவட்ட ரீஜாய்ஸ் நீச்சல் சங்கத் தலைவா் ஜோசப் ராஜசேகா், துணைத் தலைவா் செபாஸ்டியன், பொருளாளா் ஆரிப், பயிற்சியாளா்கள் அப்துல்சலாம், சதீஷ்பாண்டியன், வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.