பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்குரைஞர் அன்வர்தீன்(66) வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். உடலநலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்த முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, வழக்குரைஞா் அன்வா்தீன், ஒட்டன்சத்திரம் பத்திர எழுத்தா் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.பிணை மனுக்கள் தள்ளுபடிஇந்த வழக்கில் முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வா்தீன், சாா்பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் முருகதாஸ், சேதுபதி, அன்வா்தீன் ஆகியோா் தரப்பில் திண்டுக்கல் முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் தனித்தனியே பிணை கோரி, ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் 3 பேரின் பிணை மனுக்களை தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவா் பாக்கியராஜ் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.மதுரை மத்திய சிறையில் அடைப்புஇதற்கிடையே, நீதிமன்ற அனுமதியின் பேரில் இந்த வழக்கில் கைதான முருகதாஸ், சேதுபதி, வெள்ளத்துரை, அன்வா்தீன் ஆகிய 4 பேரை 3 நாள்கள் விசாரணைக்குப் பிறகு சிபிசிஐடி போலீஸாா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். இதையடுத்து, 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.அன்வர்தீன் உயிரிழப்புமதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்குரைஞர் அன்வர்தீனுக்கு உள்பட 3 பேரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அன்வர்தீனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்தார். அன்வர்தீனுக்கு சர்க்கரை நோய், பக்கவாதம் தொடர்பான பாதிப்பு இருந்ததாகத் தெரிகிறது. பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மோசடியாளர்கள் மத்திய பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. Lawyer arrested and imprisoned in the Palani temple land fraud case dies suddenlyஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம்