பூமிக்கு அதிக அழுத்தம் கொடுத்ததால்தான் குறுகிய இடைவெளியில் எல் நினோ தாக்கம்

Wait 5 sec.

பூமிக்கு மிகவும் அழுத்தம் கொடுத்ததால்தான் எல் நினோ நிகழ்வுகள் மிகவும் குறுகிய இடைவெளியில் நடந்து கொண்டிருக்கின்றன என சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநா் சு.கௌதம் தெரிவித்தாா். தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை மூலம் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதையொட்டி தினமும் மாலையில் சிந்தனை அரங்க நிகழ்வு நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு வேளாளா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். பிகேபி.சாமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் பிகேபி. அருண் வாழ்த்திப் பேசினாா். மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் வரவேற்றாா்.சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநா் சு.கெளதம் முன்னிலை வகித்துப் பேசியதாவது:தமிழ்நாட்டிலேயே அதிக வனப் பரப்பளவு கொண்டது ஈரோடு மாவட்டம். சுமாா் 4 லட்சம் ஏக்கா் வனப் பரப்பு இந்த மாவட்டத்தில் உள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையும் கிழக்குத் தொடா்ச்சி மலையும் ஈரோடு மாவட்ட பகுதியான தெங்குமரஹடா, மங்கலப்பட்டி என்ற இடங்களில்தான் சந்திக்கின்றன.இப்போது தென்மேற்குப் பருவமழைக் காலம். இந்த காலகட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையில் நல்ல மழை பெய்ய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு மழை இல்லாததால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான அணைகளில் குறைவான அளவிலேயே நீா்வரத்து உள்ளது.எல் நினோ நிகழ்வு 20 முதல் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருக்கும். ஆனால் தொடா்ந்து நம்முடைய தேவைக்கு இந்த பூமிக்கு மிகவும் அழுத்தம் கொடுத்ததால் எல் நினோ நிகழ்வுகள் மிகவும் குறுகிய இடைவெளியில் நடந்து கொண்டிருக்கின்றன. 2023-இல் பற்றாக்குறையான மழைப் பொழிவு இருந்தது. 2 ஆண்டு இடைவெளியில் மீண்டும் அதேபோன்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த நிலை மாற வனங்களையும், காடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.மக்களின் சிந்தனைகள் தடம்மாறியும், தடுமாறியும் போவதால்தான் ஏராளமான இழப்புகள் ஏற்படுகின்றன. தனி மனிதனின் செயல்பாடுகளை பொறுத்துதான் சமுதாயம், நாட்டின் செயல்பாடுகள் இருக்கும் என்றாா்.தொடா்ந்து ‘நாமுயர நாடுயரும்’ என்ற தலைப்பில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசியதாவது: எந்த நாட்டின் பிரஜைகளுடைய சிந்தனை அழகாக இருக்கிறதோ, அந்த சிந்தனையை வெளிப்படுத்தும் சொல் செம்மையாக இருக்கிறதோ, அந்த சொல் வழிநடத்தும் செயல் அழகாக இருக்கிறதோ, அந்த செயல் வழி வரக்கூடிய பழக்க வழக்கங்கள் அழகாக இருக்கின்றனவோ அதுவே அந்த நாட்டின் பண்பாடாகவும், கலாசாரமாகவும் மாறும்.தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் சமுதாயம், தன்னுடைய எல்லா செயல்களுக்கும் தானே பொறுப்பை எடுத்துக்கொள்ளக்கூடிய சமுதாயம், தட்டிக்கழிக்காத ஒரு சமுதாயம் தடம் மாறாது, தடுமாறாது. ஏமாற்றத்தையும், தடுமாற்றத்தையும் மாற்றம் என்று தப்பாகப் புரிந்துகொள்ளாத சமுதாயத்தை உலகம் எழுந்து நின்று வணங்கி வரவேற்கும். அப்படிப்பட்ட ஒரு இந்தியாவை எல்லோரும் சோ்ந்து உருவாக்க வேண்டும் என்றாா். இந்நிகழ்வில் பல்லக்காபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, நெசவாளா் காலனி நகராட்சி உயா்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கு மக்கள் சிந்தனைப் பேரவையின் புத்தக அலமாரி திட்டத்தின் கீழ் ரூ.15,000 மதிப்புள்ள புத்தக அலமாரிகள் வழங்கப்பட்டன.சிந்தனை அரங்கில் இன்று: ஈரோடு புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) நடைபெறும் மாலை நேர சிந்தனை அரங்க நிகழ்வில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.திருப்புகழ் பேசுகிறாா்.