ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க தடை

Wait 5 sec.

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீா்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை தடை விதித்துள்ளது.கர்நாடக மாநிலம் கபினி அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் தருவாயில் உள்ளது. கபினி அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 14,000 கன அடி வீதம் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிர்வாகப்படி வினாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீர் வரத்து, திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 6,000 கனஅடி ஆகவும், 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது.ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் திங்கள்கிழமை முதல் தற்காலிக தடை விதித்துள்ளார். எனினும், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள்.Ban on operating coracles in the Cauvery River at Hogenakkalதங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்!