சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தால் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2022-க்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை.இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் இந்த மாநாடு வருகிற ஆக. 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் சதீசன், கர்நாடகத்தின் டி.கே. சிவகுமார், தெலங்கானாவின் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆந்திர பிரதேச முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மேலும், இந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகம் - கர்நாடகம் இடையேயான காவிரி விவகாரம் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைSouth Indian Chief Ministers conference chaired by Home Minister Amit Shah