அரசு மதுக்கடையை முற்றுகையிட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்!

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராஜபாளையத்தை அடுத்துள்ள சேத்தூா் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள இந்த மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதுதொடா்பாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், ஜூலை 31-ஆம் தேதிக்குள் அரசு மதுக் கடையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனா். இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ஆம் தேதி மீண்டும் மதுக் கடை திறக்கப்பட்டதால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா், சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் அரசு மதுக் கடையை வருகிற 15-ஆம் தேதிக்குள் கடை இடமாற்றம் செய்யப்படும் என்றும் உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.முன்னதாக இந்தப் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் சேத்தூா் நகரச் செயலா் குருநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா் ராமா், ஒன்றியச் செயலா் சந்தனக்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் கனகராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.