காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் விஜய் கௌரவித்தார். காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கு குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் முதல்வர் விஜய் பட்டு வேஷ்டி சட்டையுடன் கலந்துகொண்டு காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் சாகச நிகழ்ச்சிகைளையும் முதல்வர் கண்டு மகிழ்ந்தார். முன்னதாக திறந்த ஜீப்பில் சென்று காவல் துறை அணிவகுப்பை பார்வையிட்ட முதல்வருக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காவல் துறை வாகனங்களின் சேவையையும் முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடலோர காவல் படைக்காக 42 மஹிந்த்ரா ஜீப், 96 ஹோண்டா இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 665 காவல் துறை அதிகாரிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Chief Minister Vijay honored excellence in the police department by presenting medals.கர்நாடகம் சென்று பேச்சு நடத்தி முதல்வர் விஜய் எதை சாதிக்கப் போகிறார்? - அன்புமணி