கேரளத்தில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 4 மீனவர்கள் மாயம்

Wait 5 sec.

கேரளக் கடற்கரைப் பகுதியில் இரண்டு படகுகள் கவிழ்ந்ததில் 4 மீனவர்கள் மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் கடற்கரைப் பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக இரண்டு மீன்பிடிப் படகுகள் தனித்தனி விபத்துகளில் கவிழ்ந்தன. இந்த சம்பவத்தில் 4 மீனவர்கள் மாயமாமதாக சனிக்கிழமை காவல் துறையினர் தெரிவித்தனர். மாயமான மீனவர்களைக் கண்டறிய இந்தியக் கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்கள் குறித்த வழக்குப் பதிவு செய்துள்ள அஞ்சுதெங்கு கடலோரக் காவல்துறையினர், இந்தியக் கடலோரக் காவல் படையுடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மோசமான வானிலை காரணமாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதனிடையே விழிஞ்சம் மற்றும் சங்கமுகம் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட பல படகுகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், அப்படகுகளைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் கூறினர்.Four fishermen went missing after two fishing boats capsized in separate incidents off the Thiruvananthapuram coast amid rough sea conditions, police said on Saturday.அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? முடியாதா? முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கேள்வி