முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!

Wait 5 sec.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தற்போதைய சூழலில் கர்நாடகத்துக்கு வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டுவந்தது. இந்த நிலையில், தில்லியில் நேற்று கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் அவசர ஆலோசனையில் இன்று ஈடுபட்டார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும், முதல்வர் விஜய்யின் வருகை குறித்து அவர் பேசியதாவது:தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இன்னும் அவரது பயணம் உறுதியாகவில்லை. இருவரும் அவரவர் மாநில நலன் சார்ந்த விஷயங்களில் உறுதியாகவுள்ளோம். அவருடன் தொலைபேசியில் பேசியபோது, இரு மாநிலங்களில் நலன் சார்ந்த விஷயங்களை ஆலோசித்தோம்.தற்போதைய சூழலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு வர வேண்டாம். அவர் வருகை தரும் போது கர்நாடகத்தில் போராட்டம் நடந்தால் எப்படி சமாளிப்பது. எங்கள் மாநிலத்துக்கு விருந்தினராக வருபவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். உரிய சூழல் வரும்போது இருவரும் சந்திப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.காவிரி பிரச்னை குறித்து பேசுவதற்காக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருகின்ற ஆகஸ்ட் 1, திங்கள்கிழமை அன்று பெங்களூருவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.Chief Minister Vijay should not come to Karnataka! D.K. Shivakumar's request!காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு!