காவிரி நீரைப் பெறுவதற்காக சட்டப்பூர்வமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.நீண்டகாலமாகத் தொடரும் காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை நிராகரித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், காவிரி நீரில் மாநிலத்திற்குரிய பங்கைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும், சட்டரீதியாக, உச்ச நீதிமன்றத்தின் மூலம் நமக்குத் தேவையான நீரைப் பெற வேண்டியுள்ளது என்று வெள்ளிக்கிழமை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் தொடர்ந்து நீரைத் திறந்துவிட மறுத்து வருவதாக குற்றம் சாட்டிய அமைச்சர், காவிரி நீரில் தமிழ்நாடு தனது பங்கைப் பெறுவதை தடுப்பதையே நோக்கமாகக் கொண்ட அரசியலையே கர்நாடகம் நீண்டகாலமாக செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.மாநில விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்ட வல்லுநர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களுடன் தீவிர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்; மாநிலத்தின் விரிவான சட்ட உத்தி மற்றும் இறுதி முடிவுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுதல், தீர்ப்பாயத்தை வலியுறுத்துதல், மாநிலங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துதல் அல்லது மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளை அரசு தற்போது பரிசீலித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.Law Minister CTR Nirmal Kumar asserted that the Tamil Nadu government would take all necessary legal measures to protect the interests of the state's farmers.சென்னையில் போலி ஆவணம் மூலம் சிம் கார்டு வாங்க முயற்சி: கேரள கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது