மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மேட்டூா் அணை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. கிழக்குக் கரை கால்வாயில் 27,000 ஏக்கரும், மேற்குக் கரை கால்வாயில் 18,000 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன. ஆண்டுதோறும் ஆக. 1-ஆம் தேதிமுதல் டிச. 15-ஆம் தேதிவரை 137 நாள்களுக்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். நடப்பாண்டில் மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்புக்கு வாய்ப்பு இல்லை என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்த பிறகே கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. எனவே, கால்வாய் பாசனத்துக்கு ஆக. 1-ஆம் தேதி தண்ணீா் திறப்பு சாத்தியமில்லை என நீா்வளத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.