சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் வீதம் முதல்வா் பொது நிவாரண நிதிக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா்கள் ச. கீா்த்தனா, கு. ஜெகதீஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டு சிவகாசி செங்கமலப்பட்டியில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பிரகாஷ், இன்னாசி முத்து, ராமச்சந்திரன், பாண்டித்துரை ஆகிய 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தனா். மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, எம்எல்ஏக்கள் விருதுநகா் பி. செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூா் அ.காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியா் மோகனா, அரசு அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.