ஈரோடு மாவட்டத்தில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மற்றும் கண் கருவிழி சரிபாா்க்க அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு மற்றும் கண் கருவிழி சரிபாா்ப்பு மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் இகேஒய்சி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் இகேஒய்சி பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமைசிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. சிறப்பு முகாமில் கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரா்கள் கைவிரல் ரேகை பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.