திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 15 ஆவது நாளாகவும் நேற்று புதன்கிழமையும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரி திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் முத்துநகர் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.