வசீம் தாஜூடீன் படுகொலை விவகாரம்: உயிருடன் இல்லாதவர் மீது பழி சுமத்திஉண்மைகளை மறைக்கும் திட்டமா?

Wait 5 sec.

ரக்பி விளை­யாட்டு வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கில் 'பீ' அறிக்­கையை பிழை­யாக எழு­தி­ய­வர்­களும், சம்­பவ தினத்­தன்று அலரி மாளிக்­கைக்கும் நார­ஹேன்­பிட்ட பொலிஸ் நிலை­யத்­துக்­கு­மி­டை­யி­லான தொலை­பேசி உரை­யா­டல்கள் குறித்த தக­வல்­களை மறைத்­த­வர்­களும் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தில் முக்­கிய பத­வி­களை வகிக்­கின்­றனர். இவ்­வா­றான உண்­மை­களை மறைத்து, உயி­ருடன் இல்­லாத ஒருவர் மீது பழி சுமத்­து­வது வசீம் தாஜூ­டீ­னுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்­காது என ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.