9 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட‌ சுஹைல் பிணையில் விடுவிப்பு

Wait 5 sec.

வெறும் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் தெஹி­வளை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட 21 வய­து­டைய மாவ­னெல்லை, கிரிந்­தெ­னிய பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் சுஹைல் எனும் இளை­ஞனை பிணையில் விடு­விக்க கல்­கிசை நீதிவான் நீதி­மன்றம் நேற்று முன்தினம் உத்­தரவிட்­டது. கல்­கிசை மேல­திக நீதிவான் ஹேமாலி ஹால்­பந்­தெ­னிய இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்தார்.