கோப்பைகள் வெல்வது ஒரு விஷயம். அதைத் தக்கவைப்பது என்பது முற்றிலும் வேறானது. இத்தனை ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் அது இரு முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. அப்படியொரு கடினமான விஷயத்தை ராயல் சேலஞ்சர்ஸ் செய்யுமா என்பது அவர்களின் அணுகுமுறையைப் பொறுத்தே அமையும்.