காத்தான்குடியின் இரண்டு பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த 103 பேர் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் சரியாக 35 வருடங்களாகின்றன. அன்றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனை நினைவு கூரும் முகமாக காத்தான்குடியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.