இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்க அரசாங்கம் நடவடிக்கை ; யுத்த குற்றவாளிகளும் மொசாட் குழுவும் இலங்கைக்குள் வருவதற்கு இடமளிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Wait 5 sec.

இஸ்­ரே­லுக்கு இல­வச விசா வழங்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளதன் மூலம் யுத்­தக்­குற்­ற­வா­ளி­களும் மொசாட் குழு­வி­னரும் நாட்­டுக்குள் வரு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளதன் மூலம் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்­தலை அர­சாங்­கமே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அதனால் அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்­கையை வன்­மை­யாக எதிர்ப்­ப­துடன் நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு ஏற்­ப­டக்­கூ­டிய அச்­சு­றுத்­த­லுக்கு அர­சாங்­கமே பொறுப்­புக்­கூற வேண்டும் என ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.